ஜன்தன் யோஜனா திட்டம் வெற்றிபெற கடுமையாக உழைத்த அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து

0

ஜன்தன் யோஜனா திட்டம் வெற்றிபெற கடுமையாக உழைத்த அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, ஏழைகள் அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்க ஜன்தன் யோஜனா திட்டத்தைத் தொடங்கினார். இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்ச இருப்பு இல்லாமல் வங்கிக் கணக்கை பராமரிக்கலாம். இது கோடிக்கணக்கான இந்தியர்களை முறையான நிதி அமைப்புக்குள் கொண்டு வந்தது.

இத்திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 53 கோடிக்கும் அதிகமானோர் வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர். அவர்களில் 30 கோடி பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கியவர்களில் 66.6 சதவீதம் பேர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள். 55.6 சதவீதம் பேர் பெண்கள்.

இந்நிலையில் ஜன்தன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது,

ஜன்தன் திட்டம் தொடங்கப்பட்ட 10வது ஆண்டு விழா ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது. அனைத்து பயனாளிகளுக்கும் வாழ்த்துக்கள். இத்திட்டம் வெற்றியடைய உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள். நிதி உள்ளடக்கத்தை அதிகரிப்பதில், கோடிக்கணக்கான மக்களுக்கு. ஜன்தன் யோஜனா திட்டம் குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கு கண்ணியம் அளிப்பதில் முன்னணியில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here