பாரத் டோஜோ, யாத்திரை விரைவில் துவங்கும்… ராகுல் காந்தி அறிவிப்பு

0

‘பாரத் தற்காப்புக் கலை பயிற்சி யாத்திரை’ விரைவில் தொடங்கும் என ராகுல் காந்தி வீடியோவில் தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 2022ல் கன்யாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஒற்றுமை யாத்திரையை நடத்தினார். இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை, மணிப்பூரிலிருந்து மும்பை வரை பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை (ஜோடோ யாத்ரா) நடத்தினார்.

இந்நிலையில் ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ இணையதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். கடந்த பாரத் ஒற்றுமை நீதி யாத்திரையின் போது குழந்தைகளுடன் அவர் செய்த தற்காப்பு கலை பயிற்சிகள் இதில் அடங்கும். மேலும், ‘பாரத் ஜோடோ’ யாத்திரை போல், ‘பாரத் டோஜோ’ யாத்திரையும் விரைவில் துவங்கும் என, ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here