பாரதத்தையும், இந்து தர்மத்தையும் பிரிக்க முடியாது – கவர்னர் ஆர்.என்.ரவி

0

கன்யாகுமரி மாவட்டம் வெள்ளிமலையில் அமைந்துள்ள ஹிந்து தர்ம வித்யா பீடத்தின் 41வது சமய வகுப்பு பட்டமளிப்பு விழா மற்றும் 35வது பட்டமளிப்பு விழா (செப்.22) திருவட்டாரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சமய வகுப்பு மாணவர்களுக்கு வித்யா பூஷன் பட்டங்களை வழங்கினார். முன்னதாக, ஹிந்து தர்ம வித்யா பீடம் சார்பில் ஆளுநருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் கவர்னர் பேசியதாவது: ஹிந்து தர்ம வித்யா பீடத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவை சிறந்த நாடாக மாற்ற ஹிந்து தர்ம வித்யா பீடம் 40 ஆண்டுகளாக பாடுபட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஹிந்து தர்மம் பாரதத்தை உருவாக்கியது. பாரதத்தையும் ஹிந்து மதத்தையும் பிரிக்க முடியாது. ஏறக்குறைய 1000 ஆண்டுகளாக, காலனிய ஆட்சியின் போது நமது தர்மத்தை அழிக்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்தார்கள். அவை அனைத்தையும் கடந்து வந்திருக்கிறோம்.

நமது தர்மம் அழியாதது. அதனை பலவீனப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றில் வெற்றி பெற மாட்டார்கள். சனாதன தர்மம் எளிமையானது. ஆனால் வெளியில் பார்த்தால் சிக்கலானதாகத் தெரிகிறது. ஏனென்றால் நாம் பல கடவுள்களை வணங்குகிறோம். சிலர் இதை பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

சனாதன தர்மம் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் விளக்க தயாராக இருங்கள். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினர் இதுபற்றி விளக்கம் அளிக்க தயாராக இருக்க வேண்டும்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here