டெல்லியில் சர்வதேச தொலைத்தொடர்பு மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் தரப்படுத்தல் கூட்டம் டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி தொலைத்தொடர்பு கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். இதையடுத்து, தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் தரப்படுத்தல் கூட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ஆகாஷ் அம்பானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தொலைத்தொடர்பு மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பத்தில் உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
இந்தியாவில் 120 கோடி பேர் செல்போன் பயன்படுத்துபவர்கள் என்றும், 90 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர் என்றும் அவர் கூறினார். 2014ல் இந்தியாவில் 2 செல்போன் உற்பத்தி அலகுகள் இருந்ததாகவும், தற்போது அவை 200 ஆக அதிகரித்துள்ளதாகவும் ப்ரிமிதம் தெரிவித்தார்.
உலகிற்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட செல்போன்களை வழங்கும் பணியில் இந்தியா தற்போது ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார். மேலும், ஜி 20 மாநாட்டை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தபோது, சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றிய மாநாட்டின் மூலம் உலகை மோதலில் இருந்து இணைக்கும் பணியை இந்தியா மேற்கொள்ளும் என்றும், ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற செய்தியை வழங்குவதாகவும் கூறினார்.