திமுக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் அளவுக்கு பேச்சு வார்த்தை… தமிழிசை சௌந்தர்ராஜன்

0

திமுக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் அளவுக்கு பேச்சு வார்த்தை நடந்து வருவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் உள்ள மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பாஜகவினர் முழு மரியாதை செலுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. சுதந்திர இந்தியாவில் மருது சகோதரர்களின் பங்கு முற்றிலுமாக நின்றுவிடவில்லை.

வரலாறு மறைக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு அங்கீகாரம் வழங்க பிரதமர் முழு முயற்சி எடுத்து வருகிறார்.

கவர்னர் பொது நிகழ்ச்சிகளை புறக்கணித்தாலும் பரவாயில்லை. ஆனால், உயர்கல்வித்துறை அமைச்சர் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பது நல்லதல்ல. அவை அரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள். பட்டம் பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் என்ற முறையில், அவர்களுக்கு சரியான வழி காட்ட வழி இருக்கும். அதை ஒதுக்கித் தள்ளுவது சரியல்ல.

அரசியலையும், கல்வியையும் கலப்பது தமிழகத்தில் வாடிக்கையாகி விட்டது. புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை, துணைவேந்தர் நியமனம், பட்டமளிப்பு விழா புறக்கணிப்பு என அனைத்தையும் அரசியலாக்குவது வருத்தமளிக்கிறது. அடிப்படைக் கல்வியிலும் அரசியலைப் புகுத்துகிறார்கள். மாற்றுக் கருத்துகள், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கக் கூடாது.

ஆட்சியில் எதுவும் சரியாக நடப்பதாக தெரியவில்லை. எங்களை தோற்கடிக்க யாரும் இல்லை என முதல்வரும், துணை முதல்வரும் ஆணவமாக பேசி வருகின்றனர். திமுக கூட்டணியில் விரிசல் ஏதும் இல்லை. பேச்சுவார்த்தை நடத்துவதாக முதல்வர் கூறுகிறார். ஆனால் விவாதங்கள் நிரம்பி வழிகின்றன.

திமுக நினைப்பது போல் 2026 தேர்தல் எளிதானது அல்ல. எந்த ஆட்சி வந்தாலும் அது கூட்டணி ஆட்சிதான் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here