பாதுகாப்பு கருதி இரு சக்கர வாகனங்களில் செல்வதை தவிர்க்குமாறு தொண்டர்களுக்கு தவெக தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தவெகவின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.ரோட்டில் நாளை நடக்கிறது. இந்த மாநாட்டில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் எக்ஸ் பக்கத்தில் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், தனக்கு எல்லா வகையிலும் தொண்டர்களின் பாதுகாப்பு முக்கியம் என்று கூறியுள்ளார்.
வழியில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தினார்.
மாநாட்டில், தன்னார்வலர்கள், தனியார் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினருக்கு தன்னார்வலர்கள் போதிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.