கனடாவில் இந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோவிலில் இருந்த இந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்து கனடியன் அறக்கட்டளை இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்துக்கள் மீதான தாக்குதலை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். கனடாவில் வாழும் மக்களுக்கு அவர்களின் மத நம்பிக்கைகளைப் பின்பற்றுவதற்கு உரிமை உண்டு என்று குறிப்பிட்ட அவர், சம்பவம் குறித்து உடனடி விசாரணையைத் தொடங்கிய காவல்துறைக்கு நன்றி தெரிவித்தார்.