ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் கூட்டம், ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் நடைப்பெற்றுள்ளது. தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைத்த நிலையில், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
இதில், எதிர்க்கட்சித் தலைவராக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) சுனில் ஷர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தின் போது, சபாநாயகராக அப்துல் ரஹீம் தேர்வு செய்யப்பட்டார். சட்டப்பேரவையில் அப்துல் ரஹீமை சபாநாயகர் இருக்கையில் அமர வைக்க முதலமைச்சர் ஒமர் அப்துல்லா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுனில் ஷர்மா இணைந்தனர்.
முதல் நாள் அமர்வில், முதல்வர் ஒமர் அப்துல்லா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுனில் ஷர்மா ஆகியோர் உரை நிகழ்த்தினர்.