அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி கோயிலின் தலைமை பூசாரி மஹந்த் சத்யேந்திர தாஸின் உடல் சரயு நதியில் ஜலசமாதி செய்யப்பட்டது.
அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி கோயிலின் தலைமை பூசாரி மஹந்த் சத்யேந்திர தாஸ் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது உடல் நகரம் முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. பின்னர், போலீஸ் பாதுகாப்பின் கீழ் சரயு நதியில் அவரது உடலில் கனமான கற்கள் கட்டப்பட்டு, அவரது உடல் ஆற்றில் தண்ணீரில் கரைக்கப்பட்டது.
அயோத்தி ராமர் கோயில் இயக்கத்தில் அவர் ஒரு மைய நபராக இருந்தார் என்பதும், இறக்கும் வரை சமூகத்தில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.