WhatsApp Channel
படகோட்டிகளை உள்ளடக்கிய நிஷாத் சமூகத்தினர் ராமருடன் பிரிக்க முடியாத உறவைக் கொண்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்நிலையில், அன்றைய தினம் வாரணாசியில் இலவச படகு சவாரி நடத்தப்படும் என தொண்டு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
“படகுக்காரர்களை உள்ளடக்கிய நிஷாத் சமூகம், ராமருடன் பிரிக்க முடியாத உறவைக் கொண்டுள்ளது. ராமர் வனவாசம் சென்றபோது, நிஷாத் ராஜ் அவர்களுக்கு படகோட்டி உதவினார்.
அந்த பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி வரும் 22ம் தேதி இலவச படகு சேவை வழங்க முடிவு செய்துள்ளோம். வாரணாசியில் கங்கையில் உள்ள அனைத்து 82 படகு நிறுத்தங்களுக்கும் இலவச பயணம்” என்று மா கங்கா நிஷாத்ராஜ் சேவா அறக்கட்டளை அறிவித்துள்ளது.
Discussion about this post