திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் இரண்டாவது வீடாகக் கருதப்படும் திருச்செந்தூர் முருகன் கோயிலில், ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை மகா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நேரம் குறித்து கோயில் நிர்வாகமும் விதாயகர்த்தாவும் இடையே முன்பே கருத்து மோதல் இருந்தது.
இந்த முரண்பாடு நீதிமன்றத்தில் வழக்காக மாறி, உச்ச நீதிமன்றத்தில் சென்று கடந்த சில நாட்களுக்கு முன் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, கோயில் நிர்வாகம் நேற்று மாலை கும்பாபிஷேக நேரத்தைத் தெளிவாக அறிவித்தது.
அறநிலையத்துறை இணை ஆணையர் சு. ஞானசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “திருச்செந்தூர் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு விழா, ஜூலை 1 முதல் 7 வரை சிறப்பாக நடைபெறும். இதில் முக்கியமான திருக்குட நன்னீராட்டு விழா ஜூலை 7 காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், மகா கும்பாபிஷேகம் குறித்த காலத்திற்கான குழப்பத்திற்கு முடிவுக்கேட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.