போக சயன ரங்கநாதர் மற்றும் ரங்கநாயகி தல வரலாறு:
தென்னிந்தியாவை கைப்பற்றும் நோக்கில் சாளுக்கிய அரசர் ஒருவரும் படையுடன் வந்தபோது, ஸ்ரீரங்கம் பெருமாளின் அழகில் மயங்கி, அதேபோல் ஒரு ஆலயத்தை கட்ட வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அதே நேரத்தில், ஒரு விவசாயி அறுவடை முடித்து, நெல் மணிகளை மரக்காலால் அளந்து கொண்டிருந்தான். அரசர் அதை பார்த்த வேளையில், அந்த விவசாயி திடீரென காணாமல் போனார். அரசர் அவரை தேடியபோது, அவர் (அதாவது பெருமாள்) மரக்காலைத் தலையில் வைத்து, ஒரு இடத்தில் சயன நிலையில் படுத்து மன்னருக்கு தரிசனம் அளித்தார். இந்த தெய்வீக அனுபவத்தில் மகிழ்ந்த மன்னர், ஸ்ரீரங்கம் கோயிலைப் போன்று இங்கேயும் ஒரே மாதிரியான பெருமாள் கோயிலை நிர்மாணித்தார். இதனை “வட ஸ்ரீரங்கம்” என அழைக்கிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்:
பதினெட்டரை அடி நீளமும், ஐந்தடி உயரமும் கொண்ட பெருமாள், ஐந்து தலை கொண்ட ஆதிசேஷன் மீது சயன நிலையில் கோலமாக காணப்படுகிறார். இறைவன் வலது கை தலையின் கீழும், இடது கை முன்நோக்கியும் நீட்டிய நிலையில் இருக்கிறார். திருமுகம் கிழக்கே நோக்கி பக்தர்களுக்கு அருள் புரிகிறார். அவரது திருமேனி முழுவதும் சாளக்கிராமக் கல்லால் உருவாக்கப்பட்டுள்ளது. நகைகள் கூட ரங்கநாதர் கோயிலில் காணப்படும் போலவே சாளக்கிராமக் கல்லால் செய்யப்பட்டவை. இந்தத் தலம் தேவர்களால் நன்கொடை வழங்கப்பட்டதனால், “தேவதானம்” எனப்படுகிறது.
பிரார்த்தனை:
ஏழு சனிக்கிழமைகளில் தொடர்ந்து நெய்தீபம் ஏற்றி, பெருமாளையும் புற்றில் இருக்கும் நாகராஜனையும் வழிபட்டால், விருப்பங்கள் நிறைவேறும், வேலை வாய்ப்பு கிடைக்கும், திருமணத் தடை நீங்கும் என ஐதீகம் கூறுகிறது.
இடம் மற்றும் நேரம்:
இந்தத் திருத்தலம் சென்னை மீஞ்சூரிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில், அனுப்பம்பட்டு ரயில்நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டரில் அமைந்துள்ளது.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை – 6.30 மணி முதல் 12.00 மணி வரை
மாலை – 4.00 மணி முதல் 8.00 மணி வரை