ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 15ம் தேதி திறக்கப்படுகிறது.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள், விஷு, ஓணம் பண்டிகை நாட்கள் மற்றும் பங்குனி உத்திரம் பண்டிகை நாட்களில் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெறும்.
அந்த வகையில் ஆடி மாத பூஜைக்காக வரும் 15ம் தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது. அதன்பின், 16ம் தேதி முதல், 20ம் தேதி வரை, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, இரவு பத்தரை மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.