வட மாநிலங்களில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
வட மாநிலங்களில் பொதுவாக நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. கடந்த 3ம் தேதி தொடங்கிய நவராத்திரி விழாவின் 7வது நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், நடனங்கள் நடந்தன. குஜராத் மாநிலம் போர்பந்தரில் மஹர் சமூகத்தினரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு நடனமாடினர்.
ஜாம்நகரில் இந்தோனி கர்பா நடனம் அரங்கேறியது. இதில் கலந்து கொண்ட ஆண்கள், தலையில் நெருப்பு மூட்டி நடனமாடினர்.
அகர்தலாவின் திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா துர்கா பூஜை பந்தலை திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வண்ணமயமான விளக்குகளுடன் பிரமாண்டமான துர்கா பூஜை பந்தல் அமைக்கப்பட்டு ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.