2026 சட்டமன்றத் தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் மேல் சித்தூரில் அதிமுகவினர் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், அதிமுக ஆட்சி சிறப்பாக செயல்பட்டதால் தமிழக அரசு பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. மக்களை சந்திப்பது போல் நாடகமாடி வருகிறார் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
மீண்டும் மன்னராட்சி முறை கொண்டு வரப்படும் என திமுகவினரை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, வாரிசு அரசியல் குறித்து 2026 சட்டசபை தேர்தலில் முடிவு செய்யப்படும் என்றார்.