குஜராத்தில் ரூ.146 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் துவக்கம்… அமித்ஷா

0

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித்ஷா இன்று காணொலிக் காட்சி மூலம் குஜராத் மாநிலத்தின் அகமதாபாதில் ரூ. 146 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நர்மதா கால்வாய் மீது ரூ. 36.30 கோடி செலவில் நான்கு வழிச் சாலை அமைக்கவும், சரோடி பகுதியில் ரூ. 45 கோடி செலவில் புதிய சாலை மேம்பாலம் கட்டவும் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமித்ஷா, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்தார். அதேசமயம், அகமதாபாத்-வீரம்காம் ரயில்வே பாதையில் அமைந்துள்ள சனந்த்-செக்லா-கடி சாலையில் ரூ. 60 கோடி மதிப்பீட்டில் சுமார் 1 கிலோமீட்டர் நீளமுள்ள ரயில்வே மேம்பாலம் கட்டப்படும் என்பதையும் அவர் அறிவித்தார்.

மேலும், காந்திநகர் மக்களவை தொகுதியில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்குள் மேற்கொள்ளப்படும் இத்தகைய உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் பெரிதும் பயனளிக்கக் கூடும் என அவர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமல்லாது, உள்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்தும் வகையில், குஜராத் மாநிலம் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும், சனந்த் பகுதியில் 500 படுக்கை வசதியுடன் கூடிய நவீன மருத்துவமனை ஒன்றை மத்திய அரசு அமைக்க உள்ளதாகவும், அந்த மருத்துவமனை சனந்த் மற்றும் பாவ்லா வட்டங்களிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும் 24 மணி நேரமும் தொடர்ந்து மருத்துவ சேவையை வழங்கும் எனவும் கூறினார்.

கடந்த பத்து ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 60 சதவீதத்திற்கும் அதிகமாக விரிவாக்கப்பட்டுள்ளது எனவும் அமித்ஷா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here