மழை மற்றும் வெள்ளத்தால் அசாம் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் ஹிமந்தா விஸ்வ சர்மாவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
அசாமில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 109 பேர் உயிரிழந்துள்ளனர். திப்ருகர், கோலாகட், கம்ரூப் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை மற்றும் வெள்ளத்தால் 5 லட்சத்து 97 ஆயிரம் பேர் கடும் சேதத்தை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அசாம் முதல்வர் ஹிமந்தா விஸ்வ சர்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வெள்ளத்தை சமாளிக்க அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதியளித்தார்.
இதேபோல், மழையால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத் மற்றும் உத்தரபிரதேச முதல்வர்களையும் அமித்ஷா தொடர்பு கொண்டு நிலைமை குறித்து கேட்டறிந்தார்.