இந்தியர்களுக்கு புத்தாண்டா? இல்லவே இல்லை. வேண்டுமானால் நம்மை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்திய ஆங்கிலேயக் கிறிஸ்தவனுக்கு புத்தாண்டாக இருக்கலாம். 2025 ஆண்டு என்பது ஐரோப்பியர்களுக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம்.
ஆனால் இந்தியா பத்தாயிரம் ஆண்டுகள் பழமையானது. அதனால்தான் இந்தியாவைப்பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் அறிய நம்மைவிட வெளிநாட்டினர் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுக்குத்தான் நமது பெருமை அதிகம் புரிகிறது.
நாமும் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே.
இந்தியா தனது பத்தாயிரம் வருட சரித்திரத்தில் ஒரு முறை கூட எந்த நாட்டின் மீதும் படையெடுத்ததில்லை. இந்திய நாட்டில்தான் எண்கள் கணிதம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. ஆர்யப்பட்டர் பூஜ்யத்தைக்கண்டுபிடித்தார். உலகத்தின் முதல் பல்கலைக்கழகம் இந்தியாவில் உள்ள தக்ஷசீலத்தில் கிரோக்களுக்கு முன் 700 ல் நிறுவப்பட்டது. உலகநாடுகள் பலவற்றைச்சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு கல்வி கற்றனர். இங்கு 60 விதமான பாடப்பிரிவுகளில் பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டன.கிரோக்களுக்கு முன் நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம் கல்வித்துறையில் இந்தியாவின் மிகப்பெரிய சாதனையாகத்திகழ்ந்தது. 18 ஆம் நூற்றாண்டிலேயே வங்காளத்தில் மட்டும் 80000 பள்ளிகள் இருந்ததாக கிருத்துவ பாதிரிகள் குறித்து வைத்துள்ளனர்.
நாளந்தா, தக்ஷசீலா, ஸ்ரீதன்யா, காடகா, காஞ்சிபுரம், மதுரை ஆகிய பல்கலைக்கழகங்களின் மிக உயர்ந்த தரத்தைப்பற்றி ஹாவெல் போன்றோர்வியந்து பாராட்டுகின்றனர். யுக்திகல்ப்பதரு மற்றும் ஸமராங்கண சூத்ரதாரா ஆகிய சமஸ்கிருத நூல்கள் இஞ்சினியரிங் போன்ற தொழில்நுட்ப விஷயங்களை விவரிக்கின்றன.
பதஞ்சலி சூத்திரங்களுக்கு வியாசர் எழுதிய பாஷ்யம் சரகசம்ஹிதைக்கு பிரசஸ்தபாதரின் பாஷ்யம், உத்யோகக்காரரின் வார்த்திகம்,வராகமிகிரரின் பிருகத் சம்ஹிதை ஆகியநூல்கள் நவீனயுக மெக்கானிக்ஸ், பௌதீகம் மற்றும் ரசாயனக்கலைகளைப்பற்றி தெளிவாகவிளக்குகின்றன.
வானசாஸ்திரம் கணிதம் இவை குறித்து ஆர்யப்பட்டர்,பாஸ்கரர், மேஸ்வரர்,வராகமிகிரர்,பிரம்மகுப்தர் போன்றோரின் நுல்கள் மிகப்பயனுள்ளவையாக காணப்படுகின்றன.
சதானந்தர் எழுதிய பாஸ்வதீகரணம் கணிதத்துறையில் மிகமுக்கியமானதாகும்.
நாராயணர்எழுதிய கௌமுகியில் ஜியோமிதியும் எண்கணிதமும் விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.
வரருசி என்பவர் எழுதிய வாக்கியகரணம் என்னும் நூல் வானசாஸ்திரம் குறித்து விளக்குகிறது
ரசரத்னாகாரம், ரசார்ணவம், ரசரத்ன ஸமுச்சயம் போன்ற நூல்களில் காணப்படும் பேருண்மைகள் இன்றைய ரசாயனக்கலை நூல்களை விஞ்சும் அளவிற்கு உள்ளன.
சமஸ்கிருதம் அனைத்து ஐரோப்பிய மொழிகளுக்கும் தாய்.கம்ப்யூட்டர் சாப்ட்வேரில் பயன்படுத்த உலகிலேயே மிகப்பொருத்தமான மொழி சமஸ்கிருதம்.இதை 1987 ஆம் ஆண்டு உலகப்புகழ்பெற்ற போர்ப்ஸ் பத்திரிகை சொன்னது. மனிதனுக்குத்தெரிந்த முதல் வைத்திய முறை ஆயுர்வேதம். மருத்துவத்தின் தந்தை என்றழைக்கப்படும் சரகர் 2500 ஆண்டுகளுக்கு முன் ஆயுர்வேதத்தை கண்டுபிடித்தார். இன்று உலகெங்கும் ஆயுர்வேதத்துக்கு நல்ல மரியாதை கிடைத்து வருகிறது.
நமது நாட்டில் ஏழைகள் இருப்பது உண்மைதான் என்றாலும் 17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் படையெடுப்பதற்கு முன்பு வரை உலகிலேயே செல்வச்செழிப்பான நாடாக இந்தியா இருந்தது.1896 ஆம் ஆண்டுவரை உலகத்துக்கே வைரம் வழங்கும் ஒரே நாடாக பாரதம் இருந்தது. அப்போது உலகத்தில் எந்த நாட்டிலும் வைரங்கள் எடுக்கப்படவில்லை. கடல்பயணக்கலை சிந்து நதி பிரதேசத்தில் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தது நேவிகேசன் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு கடற்பயணம் என்று பொருள்.
இந்தச்சொல் சமஸ்கிருத மொழியிலுள்ள நவ்காட்டி என்றசொல்லிலிருந்து பிறந்தது. சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வர எத்தனை நாட்கள் ஆகும் என்பதை நவீன வானவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதற்கு பலநூற்றாண்டுகளுக்கு முன்பே பாஸ்கராச்சாரியார் கண்டு பிடித்தார். சூரியனை பூமி சுற்றி வர 365 கால் நாட்களாகும் என்று 5 ஆம் நூற்றாண்டிலேயே பாஸ்கரர் கண்டுபிடித்தார். புராதன இந்தியாவின் சிறந்த வானவியல் அறிஞரான இவர் ஐந்தாம் நூற்றாண்டிலேயே பூமி ஒருதடவை சூரியனை சுற்றி வர 365 கால் நாட்கள் ஆகும் என்று துல்லியமாக கணித்துக்கூறினார்.
கணிதத்தில் பையின் மதிப்பை முதன்முதலாக போதயாயனர் என்ற இந்திய அறிஞர் கணித்துக்கூறினார். பையின் மதிப்பு 22/7 என்று அவர் கணித்தார். ஐரோப்பிய கணித மேதைகளுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அதாவது ஆறாவதுநூற்றாண்டிலேயேஅவர் இதைக்கண்டுபிடித்தார் அல்ஜீப்ரா திரிகோணமிதி கால்குலஸ் போன்ற கணித முறைகள் பாரதநாட்டிலேயே தோன்றின.
பழங்காலத்தில் கிரேக்கர்களும் ரோமானியர்களும் பயன்படுத்திய மிகப்பெரிய எண் 106 மட்டுமே. ஆனால் கிரோக்களுக்கு முன் 5000 ஆண்டிலேயே இந்துக்கள் பல ஆயிரம் கோடி எண்களைப்பயன் படுத்தினர் தசாம்ச முறையும் இந்தியாவில் தான் கண்டு பிடிக்கப்பட்டது.நம்மில் பலரும் மார்க்கோனிதான் ஒயர்லெஸ் தகவல்முறையைக் கண்டுபிடித்தார் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் பாரதத்தைச்சேர்ந்த ஜெகதீஸ் சந்திரபோஸ் என்றவிஞ்ஞானிதான் முதன்முதலில் ஒயர்லெஸ் தகவல் முறையை உருவாக்கினார் என்று ஒரு அமெரிக்க நிறுவனம் கூறியுள்ளது.
உலகின் முதல் அணைக்கட்டும் நீர்த்தேக்கமும் நமது நாட்டின் சௌராஷ்டிரா பகுதியில் சந்திரகுப்தமௌரியர் காலத்தில் கட்டப்பட்டன. சுதர்சனா என்ற அழகிய ஏரி ரைவாட்டாக மலையின் மீது கட்டப்பட்டது. செஸ் விளையாட்டு இந்தியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அறுவை சிகிச்சையின் தந்தை என்று அழைக்கப்படும் சுஷ்ருதர் 2600 ஆண்டுகளுக்கு முன்பே சில மருத்துவர்கள் களுடன் சேர்ந்து சிசேரியன் கண்புரை போன்ற சிக்கலான அறுவை சிகிச்சைகளை செய்தார்.செயற்கை கை கால் பொருத்தும் அறுவைசிகிச்சை சிறுநீரகக்கல் அறுவைசிகிச்சை மூளை அறுவைசிகிச்சை பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் உடல் அமைப்பை அழகுபடுத்தும் அறுவை சிகிச்சை களையும் இவர் செய்தார்.
அறுவைசிகிச்சையின்போது மயக்கமருந்து கொடுக்கும் பழக்கம் நம்நாட்டில் இருந்தது.125 க்கும் மேற்பட்ட கருவிகள் அறுவைச்சிகிச்சையில் பயன்ப படுத்தப்பட்டன.பலநாடுகளில் மக்கள் நாகரீகம் இன்றி காட்டில் சுற்றித்திரிந்த போது ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் ஹரப்பா நாகரீகத்தை ஏற்படுத்தினர். ஐன்ஸ்டீன் என்ற புகழ்பெற்ற விஞ்ஞானி இந்தியர்களுக்கு நாம் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.நமக்கு எண்களை எண்ணக்கற்றுக்கொடுத்தது அவர்கள்தான் அதுதெரியாவிட்டால் பல அறிவியல் கண்டுபிடிப்புகளே நிகழ்ந்திருக்காது என்று பெருமைபடக்கூறியுள்ளார்.
பிரபல ஆங்கில நாவலாசிரியர் மார்க்டுவெய்ன்:
இந்தியா என்பது மனித இனத்தின் ஊஞ்சல்,மொழியின்,பேச்சின் பிறப்பிடம் ,சரித்திரத்தின் தாய்,புராணங்களின் முன்னோடி,பாரம்பரியத்தின் பெட்டகம், மனித சரித்திரத்தின் அபூர்வமான,மதிப்புமிக்க பொருட்கள் இந்தியாவிலேயே உள்ளன என்று மனம்திறந்து பாராட்டியுள்ளார். இன்று இந்து இந்தியர்கள் உலகின் பிரபலநிறுவனங்களின் சி இஓ க்களாகவும் உலக நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திவருகின்றனர்.அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் போன்ற முன்னேறிய நாடுகளில் எல்லாம் இந்து சமயம் மிக வேகமாக பரவி வளர்ந்து வருகிறது உலகின் மிகப்பெரிய கம்ப்யூட்டர் நிறுவனமான அமெரிக்காவின் மைகாரோசாப்ட் நிறுவனத்தின் ஊழியர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் இந்தியர்கள் என்பதில் நாம் பெருமைப்படுவோம்.
இவையெல்லாம் மிகச்சிறிய உதாரணங்கள் தான். இந்துசமயம்பற்றியும் இந்தியா பற்றியும் பட்டியலிட இந்த பக்கம் போதாது என்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
பாரத்மாதாகீ ஜெய்!!!
இந்தியர்களுக்கு புத்தாண்டா? இல்லவே இல்லை… 2025 ஆண்டு என்பது ஐரோப்பியர்களுக்கு பெருமை…