நாட்டிலேயே முதல் முறையாக, உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
திருமணம், விவாகரத்து மற்றும் வாரிசுரிமை போன்ற விஷயங்களில் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி சட்டம் இருந்தாலும், அனைத்து மதங்களுக்கும் ஒரே மாதிரியான சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
இருப்பினும், மத்திய அரசுக்கு முன்பாக உத்தரகண்ட் மாநிலத்தில் இந்தச் சட்டத்தை அமல்படுத்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி முடிவு செய்தார். அதை அமல்படுத்த கடந்த ஆண்டு மாநில சட்டமன்றத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சூழ்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. மதியம் 12.30 மணிக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி பொது சிவில் சட்டம் இணையதளத்தை தொடங்கி வைப்பார்.