டெல்லி வந்தடைந்த கத்தார் மன்னர் தமீம் பின் ஹமத் அல் தானியை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார்
அரசுமுறை பயணமாக இரண்டு நாட்கள் இந்தியா வருகைதந்துள்ள கத்தார் மன்னர் தமீம் பின் ஹமத் அல் தானி (Tamim Bin Hamad Al Thani) இன்று டெல்லி வந்தடைந்தார். அவருக்கு இந்திரா காந்தி விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, பெரும் நட்புறவை வெளிப்படுத்தும் வகையில், மன்னரை ஆரத்தழுவி வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கத்தார் மன்னரை சந்தித்து, பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் இந்தியா-கத்தார் உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் என குறிப்பிடப்படுகிறது.