பிரதமர் மோடி அடுத்த மாதம் 12 ஆம் தேதி மொரிஷியஸுக்கு பயணம்

0

அடுத்த மாதம் மொரீஷியஸ் தேசிய தின விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

மொரீஷியஸ் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 12 ஆம் தேதி தனது தேசிய தினத்தை கொண்டாடுகிறது. இந்த சூழலில், நாட்டின் 57வது தேசிய தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று முன்தினம் மொரீஷியஸ் தேசிய சட்டமன்றத்தில் பிரதமர் நவீன் ராம்கூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நமது நாட்டின் 57வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் பின்னணியில், தேசிய தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள நான் ஒப்புக்கொண்டுள்ளேன் என்பதை அவைக்குத் தெரிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பிரதமர் மோடியின் வருகை நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளுக்கு சான்றாகும்” என்று நவீன் ராம்கூலம் கூறினார்.

கடந்த ஆண்டு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here