மகா கும்பமேளாவில் சிறப்பாகச் செயல்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சம்பள உயர்வு மற்றும் போனஸை அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் சிறப்பாகச் செயல்பட்ட துப்புரவுப் பணியாளர்களுக்கு கூடுதலாக ரூ.10,000 போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
இதேபோல், சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடும் வழங்கப்படும் என்று அவர் கூறினார். துப்புரவுப் பணியாளர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டுவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் முதல் ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் போனஸ் தொகை வரவு வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
துப்புரவுப் பணியாளர்களின் சம்பளம் ரூ.11,000 லிருந்து ரூ.16,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.