மும்மொழிக் கொள்கை குறித்த முதல்வர் ஸ்டாலினின் கருத்துகளுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் ராஷ்ட்ரிய லோக் தள எம்.எல்.ஏக்கள் போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் எந்த இந்திய மொழியையும் மூன்றாவது மொழியாகக் கற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் இந்தி திணிப்பு என்று கூறி உண்மைக்கு மாறான கருத்துக்களை தெரிவித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், உத்தரபிரதேசத்திலும் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக எதிர்ப்பு எழுந்துள்ளது. லக்னோவில் உள்ள மாநில சட்டமன்ற வளாகத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக ராஷ்ட்ரிய லோக் தள எம்.எல்.ஏக்கள் போராட்டம் நடத்தினர். ஸ்டாலினின் கருத்துகளை எதிர்த்தும், இந்தி குறித்த அவரது தவறான கருத்துக்களை அவர் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரி கோஷங்களை எழுப்பினர்.