WhatsApp Channel
உத்தரபிரதேசத்தில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு நாளை (சனிக்கிழமை) வருகிறார். புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையம், நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம் மற்றும் அகலப்படுத்தப்பட்ட சாலைகளை அவர் திறந்து வைக்க உள்ளார்.
1,450 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தின் முதல் பகுதியை பிரதமர் நாளை திறந்து வைக்கிறார். இந்த விமான நிலையத்திற்கு ராமாயணத்தை எழுதிய மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல், 240 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட, ‘அயோதி கோவில் சந்திப்பு’ என பெயரிடப்பட்டுள்ள அயோத்தி ரயில் நிலையத்தையும் அவர் திறந்து வைக்கிறார். ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள், உணவு கூடங்கள், பூஜை பொருட்கள் கடைகள், ஓய்வு அறைகள், குழந்தைகள் பராமரிப்பு அறைகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
இதையடுத்து ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார். 2 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் 6 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Discussion about this post