WhatsApp Channel
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மேலும், JN1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் கடந்த 26ம் தேதி நிலவரப்படி, ஜேஎன்1 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 225 நாட்களில் பதிவான அதிகபட்ச தினசரி கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை இதுவாகும். முன்னதாக, மே 19 அன்று, 865 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதே நேரத்தில், கடந்த 24 மணி நேரத்தில், கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தலா 1 பேர் என மொத்தம் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும், தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,091 ஆக அதிகரித்துள்ளது.
Discussion about this post