WhatsApp Channel
மேலும் 10 வெளிநாட்டு செயற்கைகோள்கள் ராக்கெட்டில் பொருத்தப்பட்டு விண்ணில் செலுத்தப்படும்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் நாளை காலை 9.10 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
இதில், எக்ஸ்போசாட்'' என்ற செயற்கைக்கோள் நிறுவப்பட்டு விண்ணில் ஏவப்படுகிறது. விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசி, கருந்துளை வாயு மேகம்
நெபுலா’ உள்ளிட்டவை ஆராயப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 650 கிமீ உயரத்தில் புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இது தவிர திருவனந்தபுரத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவர்கள் தட்பவெப்பநிலை குறித்து ஆய்வு செய்வதற்காக “வெசாட்’ என்ற செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட்டில் மேலும் 10 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டு விண்ணில் செலுத்தப்படும்.
இந்நிலையில், இறுதிக்கட்ட 25 மணி நேர கவுன்ட் டவுன் இன்று காலை 8.10 மணிக்கு தொடங்குகிறது. நாளை காலை 9.10 மணிக்கு கவுன்ட் டவுனைத் தொடர்ந்து விண்ணில் பறக்கும். இதற்கான பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஏவுகணையை காண 10,000 மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பதிவு செய்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நேரில் செல்ல விரும்பும் பார்வையாளர்கள் https://lvg.shar.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்து அட்மிட் கார்டைப் பெற வேண்டும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
Discussion about this post