WhatsApp Channel
பிரதமர் மோடியின் சாதனைகளை விளக்கும் மத்திய அரசின் காலண்டர் நேற்று வெளியிடப்பட்டது.
மத்திய தகவல், ஒளிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், 2024ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் காலெண்டரை புதுதில்லியில் நேற்று வெளியிட்டார். பல்வேறு துறைகளில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் இந்த காலண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய தாக்கூர், டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில், “வளர்ந்த பாரதம் (அமர சங்கல்ப் விக்ஷித் பாரத்)” என்ற தலைப்பில் 2024-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் காலண்டரை வெளியிட்டார். நாட்காட்டியில் உள்ள 12 மாதங்கள் ஒவ்வொரு கருப்பொருளையும் முன்னிலைப்படுத்தும் வகையில் தொடர்புடைய படங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார்ட்அப் துறையில் இந்தியா மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பாக மாறியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், நாடு பலவீனமான ஐந்து நாடுகளில் இருந்து உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.
நரேந்திர மோடி ஆட்சியில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74ல் இருந்து 150 ஆக உயர்ந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 7ல் இருந்து 23 ஆக அதிகரித்துள்ளது. மெட்ரோ 22 நகரங்களை அடைந்துள்ளது. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை முன்னிலைப்படுத்தி, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்துகிறது,” என்றார்.
இந்நிகழ்ச்சியில் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா மற்றும் அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Discussion about this post