WhatsApp Channel
ராஜ்பவனில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 சட்டமன்ற தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு நவம்பர் 25-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 3- வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் பாஜக 115 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சி 69 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் மாநில முதல்வராக பஜன்லால் சர்மா கடந்த 15ம் தேதி பதவியேற்றார். தியாகுமரி, பிரேம்சந்த் பைர்வா ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், பாஜக மூத்த தலைவர் குரோத்திலால் மீனா உள்ளிட்ட 22 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களில் 12 பேர் கேபினட் அமைச்சர்கள்.
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா ராஜ்பவனில் நடந்தது. புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நேற்று பதவியேற்றவர்களில் 17 பேர் புதியவர்கள்.
வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பிறகு நேற்று அமைச்சரவை அமைக்கப்பட்டு 22 பேர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post