WhatsApp Channel
பிப்ரவரி 1-ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்ற உள்ளார்.
லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த முறை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு உருவாகும் புதிய அரசு முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்யப் போகிறது. மத்தியில் ஆளும் மோடி அரசு இரண்டாவது முறையாக தாக்கல் செய்யவுள்ள கடைசி பட்ஜெட் என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரையில் அரசின் சாதனைகள், திட்டங்கள் இடம்பெறும் எனத் தெரிகிறது.
Discussion about this post