WhatsApp Channel
பினராயி விஜயன் உள்ளிட்ட 7 பேர் மீதான ஊழல் வழக்கு மே 1-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல், செங்குளம் மற்றும் பன்னியாரில் ஏற்கனவே உள்ள நீர்மின் நிலையங்களை சீரமைக்க 1996 ஆம் ஆண்டு, கனடாவின் SNC-Lavlin நிறுவனத்துடன் கேரள அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது.
இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இந்த ஒப்பந்தத்தால் கேரள மின்சார வாரியத்துக்கு ரூ.374 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக, கேரள அரசின் அப்போதைய மின்துறை அமைச்சராக இருந்த பினராயி விஜயன் உள்ளிட்ட 7 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.
இதனிடையே வழக்கில் இருந்து பினராயி விஜயன் உள்ளிட்ட 6 பேரை சிபிஐ விடுவித்தது. சிறப்பு நீதிமன்றம் மற்றும் கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாத நிலையில், இந்த வழக்கு மே 1ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Discussion about this post