WhatsApp Channel
வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வனத்தின் நடுவே இந்த விரைவுச் சாலை அமைக்கப்படுகிறது.
தலைநகர் டெல்லிக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூனுக்கும் இடையே 212 கி.மீ. தொலைவுக்கு 6 வழி பசுமை சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
ரூ.12 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படும் இந்த சாலை வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வனத்தின் நடுவே அமைக்கப்பட்டு வருகிறது.
டெல்லிக்கும் டேராடூனுக்கும் இடையிலான பயண நேரத்தை 2½ மணிநேரமாக குறைக்கும் இந்த சாலை அடுத்த ஆண்டு பொது பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், நொய்டாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அமீத் குப்தா, டெல்லி-டேராடூன் விரைவுச் சாலைக்காக எத்தனை மரங்கள் வெட்டப்பட்டன என்பதை அறிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
டெல்லி-டேராடூன் விரைவுச் சாலையில் கிட்டத்தட்ட 16 கி.மீ நீளத்தில் மொத்தம் 7,575 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதை ஈடுகட்ட, 1,76,050 மரங்கள் நடப்பட உள்ளன. உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் மரங்களை வெட்டியதற்காக வனத்துறைக்கு மொத்தம் ரூ.3,60,69,780 இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post