WhatsApp Channel
ஈரான் கைப்பற்றிய சரக்கு கப்பலில் உள்ள இந்தியர்களை சந்திக்க ஈரான் தேவையான அனுமதியை அளிக்கும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து எம்எஸ்சி இந்தியாவுக்கு ஏரீஸ் என்ற சரக்கு கப்பல் வந்து கொண்டிருந்தது. போர்ச்சுகீசியக் கொடியுடன் கூடிய இந்தக் கப்பலில் இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் எஸ்தோனியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 25 மாலுமிகள் இருந்தனர்.
இதில் இந்தியாவைச் சேர்ந்த 17 மாலுமிகளும் அடங்குவர். இந்நிலையில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையை சேர்ந்த சிறப்பு கடற்படை வீரர்கள் கப்பலை கைப்பற்றினர். இந்தக் கப்பல் இஸ்ரேலுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையில், ஹோர்முஸ் ஜலசந்தி அருகே ஈரான் ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 17 இந்திய மாலுமிகளை சந்திக்க ஈரான் அனுமதிக்கும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் உசைன் அமீர் அப்துல்லாஹியன் இன்று தெரிவித்தார்.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் போனில் பேசினார். அப்போது கப்பலில் இருந்த இந்தியர்களை விடுவிக்க ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டார்.
இந்தியர்களின் நிலைமை குறித்து கவலை தெரிவித்த அவர், இந்த விஷயத்தில் ஈரானுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். இந்நிலையில், ஈரான் கைப்பற்றிய சரக்கு கப்பலில் உள்ள இந்தியர்களை சந்திக்க ஈரான் தேவையான அனுமதி அளிக்கும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையை சேர்ந்த 3 முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்தது.
இதன்படி கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் தாக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள், 30 க்கும் மேற்பட்ட தரையிலிருந்து வான் ஏவுகணைகள் மற்றும் 150 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் தாக்கப்பட்டது. இந்நிலையில், இஸ்ரேலுடன் தொடர்புடைய சரக்கு கப்பலை ஈரான் படைகள் கைப்பற்றியுள்ளன.
Discussion about this post