எந்த வடிவத்திலும் பயங்கரவாதம் பொறுத்துக் கொள்ளப்படாது… பிரதமர் மோடி மீண்டும் திட்டவட்டம்

0

எந்த வடிவத்திலும் பயங்கரவாதம் பொறுத்துக் கொள்ளப்படாது என்று பிரதமர் மோடி மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக கூறியுள்ளார்.

குஜராத்தின் காந்திநகரில் ரூ.5,536 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தியதற்காக முப்படைகளையும் பாராட்டுவதாகக் கூறினார்.

முப்படைகளையும் பாராட்டி நாடு முழுவதும் நடைபெறும் மூவர்ணக் கொடி பேரணி மக்களின் தேசபக்தியை வெளிப்படுத்துவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

தனது உரையைத் தொடர்ந்த பிரதமர், சுதந்திரம் பெற்றதிலிருந்து இந்தியாவுடன் நடந்த மூன்று போர்களிலும் பாகிஸ்தானுக்கு பாடம் கற்பித்துள்ளோம் என்றும், எந்த வடிவத்திலும் பயங்கரவாதம் பொறுத்துக் கொள்ளப்படாது என்றும் மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக கூறினார்.

பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் வெறும் 22 நிமிடங்களில் வெற்றிகரமாக அழித்ததாகவும் பிரதமர் மோடி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here