“மத்திய வக்பு கவுன்சிலை மேலும் வலுப்படுத்துவதே அரசின் நோக்கம்” – கிரண் ரிஜிஜு

0

மத்திய வக்பு கவுன்சிலை சமூக சேவையில் மேலும் சக்திவாய்ந்ததாக்கவும், திறனாய்ந்த பதிலளிக்கும் அமைப்பாக மாற்றுவதுதான் அரசின் நோக்கமென சிறுபான்மை விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மத்திய வக்பு பவனில் நடைபெற்ற “தாயின் பெயரில் ஒரு மரம் நடுதல்” என்ற தலைப்பிலான சிறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், “மத்திய வக்பு கவுன்சிலை சமூக நலனுக்காக செயல்படும் ஒரு வலிமையான மற்றும் பதிலளிக்கும் அமைப்பாக உருவாக்கவே நாம் செயல்படுகிறோம். வக்பு சொத்துகள் மேலாண்மையை மேம்படுத்தும் சட்ட மற்றும் நிர்வாக அமைப்பை பலப்படுத்துவதற்காகவே வக்பு திருத்தச் சட்டம் 2025 அமல்படுத்தப்பட்டுள்ளது,” என்றார்.

1964 ஆம் ஆண்டில் வக்பு சட்டம் 1954-இன் விதிகளின்படி உருவாக்கப்பட்ட மத்திய வக்பு கவுன்சில், சிறுபான்மை விவகார அமைச்சின் கீழ் செயல்படும் சட்டபூர்வமான அமைப்பாகும். இது வக்பு வாரியங்களின் செயல்பாடு மற்றும் வக்பு சொத்துகள் நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் பணியை மேற்கொள்கிறது. இத்தகைய சிறுபான்மை அமைப்புகளை அதிகாரம் செய்யவும், நிர்வாகத் தூய்மையை உறுதி செய்யவும் அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

மேலும், வக்பு சொத்து ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கி, அவற்றை முறையாகப் பதிவு செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘உமீத் (UMEED)’ மத்திய இணையதளம் ஜூன் 6 ஆம் தேதி தொடங்கப்படுகிறது. இந்த போர்டல், வக்பு சொத்துகளுக்கான மேலாண்மை மற்றும் பயன்பாட்டை வெளிப்படைத்தன்மையுடன் மேம்படுத்தும் வகையில் உதவியாக இருக்கும். 9 லட்சத்துக்கும் அதிகமான வக்பு சொத்துகள் பயனுள்ள வகையில் பயன்பட வேண்டும். இதற்காக மாநில அரசுகள் மற்றும் வக்பு வாரியங்கள், தரவுகளை திட்டமிட்டும் விரைவாகவும் பதிவு செய்து நிர்வகிக்க வேண்டும்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here