கனடா அழைப்பு: ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு!

0

ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி கனடா பயணிக்கிறார்.

கனடா பிரதமரின் அழைப்பை ஏற்றதாக மோடி தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை சமூக வலைதளத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, “கனடா பிரதமர் மார்க் கார்னி தொலைபேசியில் தொடர்பு கொண்டார். பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க என்னை அழைத்தார். அவரது அழைப்பை நான் ஏற்றேன். இந்தியா மற்றும் கனடா உலகின் முக்கியமான ஜனநாயக நாடுகளாகும். இந்த இரு நாடுகளும் பலவீனமற்ற மக்கள் தொடர்புகளைக் கொண்டுள்ளன. பரஸ்பர நலன்களின் அடிப்படையில் இணைந்து செயல்படுகின்றன. ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மார்க் கார்னியை நேரில் சந்திக்க ஆவலுடன் உள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஜூன் 15 முதல் 17 ஆம் தேதி வரை கனடாவின் கனனாஸ்கிஸ் பகுதியில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க பிரேசில், மெக்ஸிகோ, தென்னாப்பிரிக்கா, உக்ரைன் மற்றும் ஆஸ்திரேலியாவின் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படாததைக் குறித்து பல தரப்பினரும் விமர்சனங்கள் முன்வைத்தனர். காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கைச் சுற்றி இந்தியா மற்றும் கனடாவுக்கிடையிலான உறவில் பதற்றம் ஏற்பட்டது. இதனாலேயே மோடிக்கு ஆரம்பத்தில் அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்தப் பின்னணியில் கனடா பிரதமர் மார்க் கார்னி நேரடியாக பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜி7 மாநாட்டில் பங்கேற்க அழைத்ததையும், அதனை பிரதமர் ஏற்றுக் கொண்டதையும் குறிப்பிடத்தக்கதாகக் கூறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here