2026-ஆம் ஆண்டுக்குள் ₹500 நோட்டுகள் செல்லாது” என்ற தலைப்பில் ஒரு யூடியூப் வீடியோ சமீபத்தில் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவலை மத்திய அரசு மறுத்து, தெளிவான விளக்கத்தையும் வழங்கியுள்ளது.
ஜூன் 2-ஆம் தேதி ‘கேபிடல் டிவி’ என்ற யூடியூப் சேனலில் வெளியான வீடியோவில், வரும் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு ₹500 நோட்டுகள் செல்லாது என கூறப்பட்டுள்ளது. சுமார் 12 நிமிடங்கள் கொண்ட அந்தக் காணொளியை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இது பொதுமக்களிடம் குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மத்திய அரசு இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று விளக்கமளித்து, ரிசர்வ் வங்கி இதுபோன்ற எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று கூறியுள்ளது.
இந்த தகவலுக்கெதிராக, மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு எக்ஸ் (முந்தைய ட்விட்டர்) இல் வெளியிட்ட பதிவு ஒன்றில், “₹500 நோட்டுகள் செல்லுபடியாகவே உள்ளன; அவை ரத்து செய்யப்படவில்லை. தவறான செய்திகளில் மாட்டிக்கொள்ள வேண்டாம். உத்தியோகபூர்வ தகவல் மூலங்களை நம்பி மட்டுமே தகவல்களை பகிரவும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது பரிசிலிக்கப்பட்ட ₹500 நோட்டுகள், 2016-ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டவை. 66 மிமீ x 150 மிமீ அளவுடைய இந்த சாம்பல் நிற நோட்டுகளில், இந்திய ரூபாயின் பிற நோட்டுகள்போலவே, 17 மொழிகளில் அதன் மதிப்பு எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.