“பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை நட்பு நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்” – ஜெய்சங்கர்

0

பயங்கரவாதத்திற்கு எதிராக “பூஜ்ஜிய சகிப்புத்தன்மை” கொள்கையை இந்தியா கடைப்பிடிக்கின்றதாகவும், அதனை நட்பு நாடுகள் புரிந்துகொள்வார்கள் என நம்புவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் லாம்மி தலைமையிலான குழுவினர், இருநாள் உத்தியோகப்பூர்வ பயணமாக இந்தியா வந்துள்ளனர். இக்குழுவினர் நியூடெல்லியில் ஜெய்சங்கரை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் குறித்துப் பேசினார் ஜெய்சங்கர்.

அவர் கூறியதாவது:

“பகுத்தறிவற்ற பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டித்து, அதற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு இங்கிலாந்து வழங்கிய ஆதரவுக்கு நன்றி. பயங்கரவாதத்திற்கு நாங்கள் எந்த விதமான சகிப்புத்தன்மையையும் காண்பிக்க மாட்டோம். தீய செயல்களில் ஈடுபடும் நபர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிகராகக் கருதப்பட முடியாது. இதைப் பற்றி நமது நட்பு நாடுகள் தெளிவாகக் கையாளும் என நம்புகிறோம்” என்று கூறினார்.

மேலும், சமீபத்தில் கையெழுத்தான இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இரட்டை பங்களிப்பு மாநாடு ஆகியவை முக்கியமான முன்னேற்றங்களாக உள்ளன என்றும் அவர் கூறினார். இந்த சந்திப்பில், பாகிஸ்தானின் எல்லை தாண்டி நிகழும் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த பிரச்சனைக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ மோதலின் போது, இரு நாடுகளுடனும் தொடர்பில் இருந்து பதற்றம் குறையச் செயல்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒரு முக்கிய பங்காற்றியது. மே 16ஆம் தேதி இஸ்லாமாபாத் சென்ற டேவிட் லாம்மி, மே 10ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வரவேற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here