உயிர் பிழைத்தது எப்படி? – விமான விபத்தில் தப்பித்த ஒற்றை நபரான விஷ்வாஸ் பேட்டி

0

“விமானம் மோதும் போது, நான் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். ஆனால் கண்களைத் திறந்தபோது உயிருடன் இருப்பதை உணர்ந்தேன்,” என்று அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரே நபராக இருந்த விஷ்வாஸ் குமார் ரமேஷ் தெரிவித்தார்.

விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் விபத்தில் உயிர் பிழைத்த விஷ்வாஸ் மற்றும் காயமடைந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பிரதமர் மோடி நலம் விசாரித்தபின், விஷ்வாஸ் தூர்தர்ஷனுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் எல்லாம் குழப்பமாகிவிட்டது. பச்சை மற்றும் வெள்ளை விளக்குகள் எரிந்தன. விமானம் வேகமாக புறப்படுவதுபோல் உணர்ந்தோம். ஆனால் அதே நேரத்தில் கட்டிடத்துடன் மோதியது.

நான் அமர்ந்திருந்த இடம் நேரடி மோதல் நிகழ்ந்த பகுதி இல்லை. அந்த இடம் விடுதியின் தரைத் தளத்தில் விழுந்தது. கதவு உடைந்ததும் வெளியில் சிறிது இடம் இருந்தது. அங்கிருந்து நான் வெளியேற முயற்சித்து, வெளியே வந்தேன். விமானம் எதிர்புறக் கட்டிடத்தில் முழுவதுமாக மோதியதால், அந்த பக்கம் யாரும் வெளியே வர முடியவில்லை.

நான் எப்படிப் பிழைத்தேன் என்பதைத் தான் எனக்கே புரியவில்லை. தீப்பற்றியபோது என் இடது கையை தீ உறைந்தது. பின்னர் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இங்கு அனைவரும் எனக்கு நல்ல பராமரிப்பு அளிக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்தும், நான் எப்படி உயிர் தப்பினேன் என்பதையும் பிரதமர் மோடி கேட்டார். என் கண் முன்னே எல்லாமே நடந்தது. நான் உயிருடன் இருப்பதே நம்ப முடியவில்லை. நான் சீட் பெல்ட்டை கழற்றி வெளியேற முடிந்தது என் уда்சியாகும். ஆனால் என் உறவினர்கள் மற்றும் விமான பணியாளர்கள் அங்கேயே உயிரிழந்தனர்.”

இதற்கு முன்னதாக, ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாதிலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து தீப்பற்றியது. விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். உயிர் பிழைத்த ஒரே நபர் விஷ்வாஸ் குமார் ரமேஷ் ஆவார்.

விமானம் தரையில் விழுந்தபோது மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியதால், 10 மருத்துவ மாணவர்களும் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here