விமான விபத்து விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்: ஏர் இந்தியா சிஇஓ கேம்பல் வில்சன்

0

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி – ஏர் இந்தியா அறிவிப்பு

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, ஏர் இந்தியாவின் பெற்றோர் நிறுவனமான டாடா குழுமம் தலா ரூ.1 கோடி, அதாவது சுமார் 85,000 பவுண்ட் நிதியுதவி வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நிறுவத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான கேம்பல் வில்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவில் அவர் கூறியதாவது, “இந்த துயரான நிகழ்வில் 241 பயணிகள் உயிரிழந்துள்ளதை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். இழந்த குடும்பங்களின் வலியை உணர்கிறோம்; அவர்களுக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம்.”

“நமது நிறுவனமான டாடா குழுமம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவியை வழங்க உள்ளது. காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவுகளும் நிறுவனத்தால் ஏற்கப்படும். சம்பவ இடத்தில் தொழில்நுட்ப நிபுணர்கள் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்,” எனவும் கூறினார்.

மருத்துவக் கல்வியில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் உட்பட காயமடைந்தோர் குறித்து நிறுவனத்துக்கு அதிக கவலை இருப்பதாகவும், இந்த கடினமான காலத்தில் ஏர் இந்தியா எந்தவித தடையுமின்றி முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

“நான் நேரில் சம்பவ இடத்தைச் சுற்றிப் பார்த்தேன். அங்கிருந்த பயங்கரக் காட்சிகள் மனதை வருத்தியது. அதிகாரிகளையும், சம்பந்தப்பட்ட குழுக்களையும் சந்தித்து, விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை அளிக்க உறுதி தெரிவித்தேன். விசாரணை முடிவுக்கு வர இன்னும் சிறிது நேரம் தேவைப்படும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்தப் பகுதியில் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவோம். நம்மீது உள்ள நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்ள ஏர் இந்தியா தொடர்ந்து தனது கடமைகளை செய்வதாக உறுதியளிக்கிறோம்,” எனவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here