அகமதாபாத்தில் நடந்த 241 உயிர்களை இழந்த பயங்கரமான விமான விபத்தில் பல குடும்பங்களின் கனவுகள் கலைந்து போயுள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்தார். இதில் பயணம் செய்தவர்களின் கனவுகள் கலைந்து அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீள முடியாத சோகத்துக்குச் சென்றுள்ளனர். விபத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த 10 பேர் இறந்தனர். அதில் 5 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
அவர்கள் தொழில்முறை முன்னேற்றத்துக்காகவும், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் இந்த முடிவை எடுத்திருந்தனர். ஆனால் நடந்து முடிந்த கோர விபத்தில் டாக்டர் பிரதீக் ஜோஷி குடும்பத்தார் அனைவரும் இறந்தது பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விமானம் புறப்படுவதற்கு முன்பு கோனி வியாஸ், பிரதீக் தங்களது குழந்தைகளுடன் செல்பி எடுத்துக்கொண்டு அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். ஆனால், அதுவே அவர்களது கடைசி புகைப்படமாகி விட்டது.
சிகிச்சைக்காக வந்தவர்: லண்டனைச் சேர்ந்த ரூபல் பென் படேல், தனது கணவர், 3 குழந்தைகளுடன் லண்டனில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் தனது மருத்துவ சிகிச்சைக்காக குஜராத்துக்கு வந்து அவரது உறவினர் வீட்டில்யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மூலம் கணைய அழற்சி குறையும் என ஆய்வு தெரிவிக்கிறது
யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சார்ந்த சிகிச்சைகள், கணைய அழற்சி மற்றும் அதனுடன் ஏற்படும் கட்டி (நீர்க்கட்டி) பாதிப்புகளை படிப்படியாக குறைக்கக் கூடியவை என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்திய அரசின் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் மருத்துவர் ஒய். தீபா தலைமையிலான மருத்துவக் குழுவினரால் இந்த ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டது. ஆய்வில் மருத்துவ ஆய்வாளர்களான ஏ. விஜய், கே. பத்மாவதி, ஆர். நித்யஸ்ரீ மற்றும் மூவேந்தன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
அந்த ஆய்வில் தெரிவிக்கப்படுவதாவது:
கணைய அழற்சி என்பது, கணையம் பாதிப்படைவதன் காரணமாக உண்டாகும் வீக்கம் அல்லது பாதிப்பு. இது நீடித்துவிட்டால் கணையத்தின் உள் சுரப்பி (அகச்சுரப்பி) மற்றும் வெளிச்சுரப்பி (புறச்சுரப்பி) செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. சில நேரங்களில், இந்த அழற்சி சூடோசிஸ்ட் எனப்படும் நீர்க்கட்டிகளை உருவாக்கும்.
உலகளவில், லட்சம் மக்களில் 163 பேர் வரை இந்த அழற்சியால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 40% பேர் நாள்பட்ட அழற்சியாலும், 26% பேர் தற்காலிக அழற்சியாலும் நீர்க்கட்டிகள் உருவாகின்றன.
அத்தகைய ஒரு நிலையில், 23 வயதுடைய பெண் ஒருவர் இயற்கை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடும் வயிற்று வலி, மலம் கழிக்க வல்லாமை, கால்களில் எரிச்சல் மற்றும் எடை குறைதல் போன்ற அறிகுறிகள் இருந்தன. பரிசோதனையில், அவருக்கு தீவிர கணைய அழற்சி மற்றும் பெரிய அளவிலான நீர்க்கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, பவனமுக்தாசனா, வக்ராசனா போன்ற 7 வகையான யோகாசனங்கள், பிராணாயாமம் மற்றும் இயற்கை மருத்துவ முறைகள் உள்ளிட்ட சிகிச்சைகள் 20 நாட்கள் வழங்கப்பட்டன. இந்த சிகிச்சையின் முடிவில், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையில் அவரது கணையக் கட்டி மற்றும் அழற்சி கணிசமாக குறைந்திருப்பது உறுதியாகியிருந்தது.
இந்த ஆய்வு ஒரு நோயாளியின் சிகிச்சை மற்றும் பதிலளிப்பை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. எனவே, இது போன்ற முடிவுகளை பொதுவாக நிரூபிக்க, விரிவான மற்றும் கூடுதல் ஆய்வுகள் தேவையெனவும் அந்த ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கியிருந்தார். சிகிச்சை முடிந்த நிலையில் அவர், லண்டன் விமானத்தில் புறப்பட்டார். ஆனால், துரதிருஷ்டவசமாக விபத்தில் சிக்கி இறந்தார். அவரை வழியனுப்ப ரூபல் பென்னின் அண்ணன், அண்ணி ஆகியோர் அகமதாபாத் வந்திருந்தனர். வழியனுப்பி விட்டு அவர்கள் ஊருக்குத் திரும்பிய பின்னர்தான் தனது தங்கை ரூபல் பென் இறந்த செய்தி அவருக்கு தெரிந்துள்ளது.
இதுகுறித்து அஞ்சுவின் தங்கை நீலு சர்மா கூறும்போது, “விமானத்தில் ஏறிய பின்னர், அஞ்சு சர்மா எனக்கு வீடியோ கால் செய்தார். ஆனால் அப்போது என்னால் போனை எடுக்க முடியவில்லை. அவரை இனி பார்க்கவே முடியாது என்று எண்ணும் போது சோகம் தாங்க முடியவில்லை” என்று கூறிவிட்டு உடைந்து அழுதார்.