வயிற்றுத் தொற்று காரணமாக டெல்லியின் சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி, தற்போது தேறி வருவதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரசின் மூத்த தலைவரும், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவருமான சோனியா காந்தி, சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார். அவருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டதையடுத்து பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பிறகு டெல்லிக்கு திரும்பிய அவர், கடந்த 9-ஆம் தேதி சர் கங்கா ராம் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு சென்றார்.
இந்நிலையில், வயிற்று வலி ஏற்பட ஏற்பட்டதையடுத்து சோனியா காந்தி மீண்டும் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 78 வயதுடைய அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறதோடு, அவரது உடல் சிகிச்சைக்கு நல்ல முறையில் பதிலளித்து வருவதாக மருத்துவர் அஜய் ஸ்வரூப் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“அவர் உடல்நிலை சீராக உள்ளது. வயிற்றுத் தொற்றிலிருந்து அவர் மெதுவாக மீண்டுவருகிறார். அவரது உணவுமுறை மிகவும் கவனமாக கண்காணிக்கப்படுகிறது. சோனியா காந்தி தொடர்ந்து மருத்துவப் பார்வையில் இருக்கிறார். முன்னெச்சரிக்கையாக, அவரது டிஸ்சார்ஜ் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. டாக்டர் எஸ். நந்தி மற்றும் டாக்டர் அமிதாப் யாதவ் ஆகியோர் உட்பட மருத்துவ குழு அவரது சுகாதியையும் உணவையும் நன்கு கவனித்துவருகிறார்கள்,” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.