அர்மீனியா வழியாக ஈரானிலிருந்து பாதுகாப்பாக இந்திய மாணவர்கள் திரும்பினர்
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் சூழ்நிலை மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானில் சிக்கியிருந்த 110 இந்திய மாணவர்கள் நேற்று இரவு டெல்லிக்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டனர்.
தோகாவை அடைந்து, அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் இந்தியா திரும்பிய இம்மாணவர்களில் 90 பேர் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஈரானின் உர்மியா மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
ஈரானில் தற்போதைய மதிப்பீட்டின்படி 4,000-க்கும் அதிகமான இந்தியர்கள் உள்ளனர். இதில் பெரும்பான்மையானோர் மாணவர்களாக இருக்கின்றனர். தற்போதைய பதற்றமான சூழலில், தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக மீட்டுவர வேண்டி, பெற்றோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு மனுவிட்டு உதவி கோரினர்.
இதனை அடுத்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக செயலில் இறங்கியது. ஈரானிலிருந்து அர்மீனியா எல்லை வழியாக அவர்களை வெளியேற்றி, அதன் மூலம் இந்தியா அழைத்துவரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.