பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானம் அருகே நடைபெற்ற கூட்ட நெரிசல் காரணமாக 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பின்னணி காரணமாக, கர்நாடக அரசு கூட்டங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டங்களை கொண்டு வர திட்டமிட்டு உள்ளது.
இந்த புதிய திட்டத்தின் கீழ், பெரிய அளவிலான நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் ஒருங்கிணைப்பாளர்களே பாதுகாப்பு குறைவால் ஏற்படும் விபத்துகளுக்கு நேரடி பொறுப்பாளர்களாக கணிக்கப்படுவர். இது தொடர்பாக, மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரைவு சட்ட மசோதையின் படி, நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் முன்பே அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும். கூட்டம் கட்டுப்பாடின்றி நடைபெற, அத்துடன் ஏற்படும் பாதிப்புகளுக்குத் தேவையான இழப்பீடுகளை வழங்கத் தவறினால், அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றும், சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜூன் 4ஆம் தேதி, ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றதை கொண்டாட, சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இந்த கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர், மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் கர்நாடக அரசு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதனையடுத்து, அரசாங்கம் புதிய சட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது.