ராகுல் காந்தி மோடியை குறித்த கடுமையான விமர்சனம்:
பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கையை ஊட்டி முழக்கங்களை அளிப்பதில் திறமை வாய்ந்தவர், ஆனால் அதற்கான நடைமுறை தீர்வுகளை வழங்குவதில் பின்தங்கியவர் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவராகவும், மூத்த காங்கிரஸ் உறுப்பினராகவும் இருக்கும் ராகுல், சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், ‘மெக்கின் இந்தியா’ திட்டம் தொழிற்துறையை பெரிதும் வளர்க்கும் என கூறப்பட்டபோதும், உண்மையில் உற்பத்தித் துறை சரிவை சந்தித்துள்ளது என கூறியுள்ளார்.
“இந்தியாவில் உற்பத்தி வளர்ச்சி பெருகும் என்ற நம்பிக்கையை மோடி வழங்கினார். ஆனால், இளம் தலைமுறைக்கு வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. சீனாவிலிருந்து இறக்குமதிகள் இரட்டிப்பு அளவில் அதிகரித்துள்ளன. 2014 முதல் இந்திய பொருளாதாரத்தில் உற்பத்தி பங்களிப்பு 14% வரை குறைந்துள்ளது,” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லியில் ஷிவாம், சைஃப் ஆகிய இளைஞர்களை சந்தித்ததாகவும், தொழில் தொடங்கும் முயற்சிக்கு அவர்கள் வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“உண்மை வெளிச்சத்தில் தெரிகிறது — அரசு உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிப்பதில் முனைப்பாக இல்லை; மாறாக, இறக்குமதியையே ஆதரிக்கிறது. இதனால் சீனாவுக்கே நன்மை கிடைக்கிறது.
மோடியின் பல பேசப்படும் திட்டங்கள் நிஜத்தில் செயலற்றவையாகிவிட்டன. உற்பத்தி ஊக்கத்தொகை திட்டம் கூட தற்போது அமைதியாக மறைந்துவிட்டது.
நம் நாட்டின் உற்பத்தியாளர்களை அதிகாரமளிக்கும் வகையில் நேர்மையான மாற்றங்கள் மற்றும் நிதி ஆதரவு தேவை. நாம் மற்ற நாடுகளுக்கான சந்தையாக இருக்க வேண்டாம். உள்நாட்டில் தொழிற்கள் உருவாகாவிட்டால், இறக்குமதி மட்டுமே தொடரும். நேரம் விரைந்து செல்கிறது,” என ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.