யமுனை நதியை சுத்தமாக்கும் திட்டம் குறித்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
யமுனை நதி நமது மதிப்பிற்கும் நம்பிக்கைக்கும் அடையாளமாக இருக்கிறது. கடந்த அரசுகள் இந்த நதியை அலட்சியமாகக் கவனிக்காமல் விட்டுவிட்டன. அதைப் பராமரித்து தூய்மைப்படுத்த எந்த முயற்சியும் எடுத்ததில்லை. முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் யமுனையின் நீரை குடிக்கத் தகுந்த அளவிற்கு சுத்தமாக மாற்றுவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தாலும், அதை நடைமுறையில் கொண்டு வரவில்லை. ஆனால் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, யமுனை நதியை சுத்தம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். எனத் தெரிவித்தார்.