ஸ்ரீசைலம் கோயிலருகே சந்தேகத்திற்கிடமான பையில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: போலீசார் தீவிர விசாரணை

0

ஸ்ரீசைலம் கோயிலருகே சந்தேகத்திற்கிடமான பையில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: போலீசார் தீவிர விசாரணை

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மல்லிகார்ஜுனர் கோயிலுக்கு அருகே சந்தேகத்திற்கிடமான பையில் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கி தோட்டக்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று, கோயிலின் அருகிலுள்ள வாசவி சத்திரத்தின் எதிரே சாலையோரம் கைப்பிடிக்கப்படாமல் ஒரு பை கிடந்ததை பக்தர்கள் கவனித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், வெடிகுண்டுத் துறை நிபுணர்களுடன் அந்த பையை கைப்பற்றி சோதனை செய்தனர்.

அதில் 4 நாட்டு கையெறிகுண்டுகள், 9 பெரிய ரக தோட்டக்கள் மற்றும் 4 சிறிய ரக தோட்டக்கள் உள்ளன என தெரியவந்தது. இந்த பை யாரால் எங்கேயிருந்து கொண்டு வரப்பட்டது என கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சோதனை நடைபெற்று வருகிறது.

அத்துடன், இது பயங்கரவாத நடவடிக்கையின் ஒரு பகுதியா? அல்லது வேறு ஏதாவது திட்டமா? என்பதையும் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here