அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ‘கோஸ்ட்’ முறையைத் தடுக்க புதிய உத்தரவு!

0

அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ‘கோஸ்ட்’ முறையைத் தடுக்க புதிய உத்தரவு!

அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், மாணவர்கள் வகுப்புகளுக்கு வராமலேயே தேர்ச்சி பெற முயற்சிக்கின்றனர் என புகார்கள் எழுந்துள்ளன. இதை கட்டுப்படுத்தும் வகையில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் தினசரி வருகையை ஆன்லைன் முறையில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. அதற்காக, மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் தேர்ச்சி வீதம் ஆகியவை முக்கியமான அளவுகோல்களாக இருக்கின்றன. இதன் காரணமாக, அரசு அங்கீகாரப் பள்ளிகளில் சேர்க்கை குறைந்து வருகிறது. இதை சமாளிக்க, பல பள்ளிகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக புகார் உள்ளது.

இதில் முக்கியமாக, “கோஸ்ட் முறையின்படி” மாணவர்கள் பள்ளிக்கு வராமலேயே பெயரளவில் சேர்க்கை பெறுகின்றனர். இதனால், அவர்கள் வேறு வேலைகளில் சேர்ந்து பணியாற்றுகின்றனர். இறுதியில், தேர்வுகளில் குறிப்பிட்ட தொகை செலுத்தி தேர்ச்சி பெறுகின்றனர் என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன.

இதே போல, சில ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களும் பள்ளிக்கு வராமலேயே இருப்பதாக கூறப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில், உ.பி அரசு ஜூலை 1ம் தேதியிலிருந்து அனைவரின் வருகையையும் ஆன்லைனில் பதிவு செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

முந்தைய காலங்களில், ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்தாமல், பதிலாக மற்றவர்களை குறைந்த ஊதியத்தில் அனுப்பி ஊதியம் பெற்றனர் என்ற புகாரும் இருந்தது. இதன் மூலம் சிலர் ஒரே நேரத்தில் பல பள்ளிகளில் பணியாற்றி, ஏராளமான அரசுப் பணம் பெற்றதற்கும் சாட்சிகள் உள்ளன.

இதையடுத்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆன்லைன் வருகைப்பதிவு முறையை முதலில் ஆசிரியர்களுக்காக கொண்டு வந்தார். தற்போது, அதே முறை மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த புதிய திட்டத்தின் கீழ், 9 முதல் 12ம் வகுப்புவரை உள்ள மாணவர்களின் வருகை பதிவு செய்யும் பணியை ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர். இதற்கான முதலாவது சோதனை நேற்று பிரயாக்ராஜில் உள்ள மாநில கல்வி இயக்கக அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த திட்டத்தின் செயல்பாடுகள் முறையாக நடைமுறைக்கு வந்தால், உ.பி மாநிலத்தின் கல்வி தரம் மேலும் உயரும் என நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here