பழைய வாகனங்கள் அகற்றம் தீவிரம் – மத்திய அரசின் புதிய நடவடிக்கைகள்
மத்திய அரசு அமல்படுத்திய பழைய வாகனங்களை அகற்றும் கொள்கையின் கீழ், நாடு முழுவதும் இதுவரை 2.45 லட்சம் வாகனங்கள் ஸ்க்ராப் செய்து அழிக்கப்பட்டுள்ளன. அதிக மாசு மற்றும் சாலை பாதுகாப்புக்கு ஆபத்தாக மாறிய பழைய வாகனங்களை நீக்குவது முக்கிய நோக்கமாகும்.
2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி, மத்திய அரசு இந்த கொள்கையை அறிவித்தது. அதன் படி, 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், இந்த விதிமுறைகள் பெரும்பாலும் டெல்லி உள்ளிட்ட சில நகரங்களில் மட்டுமே கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன.
அமலாக்க நடவடிக்கைகள்
- கடந்த சில மாதங்களாக டெல்லியில், பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- பழைய வாகனங்களை அகற்ற மத்திய அரசு “இ-வாஹன்” மற்றும் “வி-ஸ்கிராப்” இணையதளங்களில் பதிவு செய்யுமாறு வாகன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அகற்றும் முறை:
- வாகனங்கள் பரிசோதிக்கப்பட்ட பிறகு, அவற்றின் பாகங்கள் (டயர், பேட்டரி, இன்ஜின், கண்ணாடி) தனித்தனியாக பிரிக்கப்படுகின்றன.
- பின்னர் வாகனம் முழுமையாக ஸ்க்ராப் செய்யப்பட்டு, உரிமையாளருக்கு வைப்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
புதிய வாகனங்களுக்கு சலுகைகள்:
- பழைய வாகனங்களை ஸ்க்ராப் செய்தவர்கள் புதிய வாகனங்களை வாங்கும்போது 15%-25% வரிச் சலுகை மற்றும் பதிவுக் கட்டண தள்ளுபடி பெறுகிறார்கள்.
- டாடா, மாருதி, ஹுண்டாய், மஹிந்திரா போன்ற 12 முக்கிய வாகன நிறுவனங்கள் கூடுதல் சலுகைகளை வழங்குகின்றன.
தடைகள் மற்றும் அபராதங்கள்:
- பழைய வாகனங்களுக்கு சோதனை கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
- சட்டங்களை மீறி ஓட்டப்படும் பழைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படலாம், மேலும் அபராதமும் விதிக்கப்படுகிறது.
- புதிய வாகனங்களுக்கு விதிகள் சற்று தளர்வாக இருக்கின்றன.