உத்தரகண்டில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம்: தரளி கிராமம் முழுமையாக அழிந்து, 100 பேர் காணாமல் போனது – விரிவான தகவல்

உத்தரகண்டில் நேற்று மேகவெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதோடு, 100-க்கும் மேற்பட்டோர் காணாமலாகி உள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

உத்தரகண்டில் உள்ள புனித திருத்தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை சார்தாம் என அழைக்கப்படுகின்றன. இம்மூலையில், கங்கோத்ரி கோயிலுக்கு 8 கி.மீ. தொலைவில் தரளி என்ற கிராமம் அமைந்துள்ளது. இமயமலையில் 10,200 அடி உயரத்தில் உள்ள இந்த கிராமம் வழியாகவே பக்தர்கள் கங்கோத்ரி கோயிலுக்குச் செல்லும் வழிமுறை உள்ளது. இதனால் இக்கிராமத்தில் 25க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் இருந்தன. சுமார் 2,000க்கும் மேற்பட்டோர் இங்கு வாழ்ந்து வந்தனர்.

கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் நிலம் நனைந்து இருந்த சூழ்நிலையில், நேற்று பிற்பகலில் கங்கோத்ரி அருகே மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் கீர் கங்கா நதியில் திடீரென வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளம் தரளி கிராமத்தை நோக்கி ஆவேசமாக பாய்ந்தது. வன்மையான வெள்ளத்தால் முழு கிராமமே அழிந்து விட்டது.

மீட்புப் பணிகளில் ராணுவம், விமானப்படை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்பு மற்றும் காவல் துறைகள் ஆகியவை பங்கேற்று வருகின்றன. தற்போது வரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் தற்போது வரை காணவில்லை.

தரளி அருகே ஹர்சில் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மற்றும் ஹெலிபேட் ஆகியன வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அங்கு பணியாற்றிய 10 ராணுவ வீரர்களும் காணாமலாகி உள்ளனர்.

மத்திய அரசின் பதில்:

பிரதமர் நரேந்திர மோடி, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார். தேவையான உதவிகளை மாநில அரசுக்கு வழங்குவதாக உறுதியளித்தார். சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தரளி கிராம வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் மீண்டு வரட்டும் என பிரார்த்திக்கிறேன். மாநில அரசு மீட்புப் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேவையான அனைத்தும் உதவிகள் வழங்கப்படும்,” என்றார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் முதல்வரைத் தொடர்புகொண்டு, மத்திய அரசின் முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக கூறியுள்ளார்.

முதல்வரின் பதில்:

உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “இயற்கை பேரழிவால் தரளி கிராமத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து மக்களும் பத்திரமாக மீட்கப்படுவதாக பிரார்த்திக்கிறேன்” என சமூக வலைதளத்தில் தெரிவித்தார்.

மீட்புப் படையின் தகவல்:

மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம், கீர் கங்கா நதியைச் சேர்ந்த நீரை பலத்த வேகத்தில் (43 கி.மீ./மணி) பல அடி உயரத்துக்கு கொண்டு வந்து, தரளி கிராமத்தை அடித்துச் சென்றதாக மீட்புப் படை வீரர்கள் கூறினர். மிகக் குறுகிய நேரத்தில் முழு கிராமமும் அழிந்துவிட்டது. தற்போது வெள்ளம் ஓடிய பின், 30 அடி உயரத்துக்கு சகதி தேங்கி கிடக்கிறது.

அந்த சகதியில் சிக்கியவர்களை தேடுவதற்கான பணிகள் மிகவும் சவாலானதாக உள்ளன. வீடுகள், கடைகள், ஹோட்டல்கள் இருந்த இடமே தெரியாமல் சகதியில் புதைந்து போயுள்ளன. சுமார் 13.4 ஏக்கர் பரப்பளவில் இருந்த கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன.

இடைவிடாமல் கனமழை பெய்துவருவதால், மீட்புப் பணி மிகவும் கடினமாக நடக்கிறது. இரவும் பகலும் தூக்கமின்றி மீட்பு பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Facebook Comments Box