ஜனாதிபதி திரெளபதி முர்முவின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் மோடி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி, எக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில், குடியரசுத் தலைவரின் முன்மாதிரியான சேவை மற்றும் அர்ப்பணிப்பு அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஏழை, எளிய மக்களுக்கு அவர் ஆற்றிய சேவை தொடர்ந்து வழிகாட்டி வருவதாகவும், குடியரசுத் தலைவரின் வாழ்க்கைப் பயணம் கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையைத் தருவதாகவும் அந்த வீடியோவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவரின் அயராத சேவை மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு தேசம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தனது வாழ்த்துக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Discussion about this post